search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    திருமணம் நிறுத்தம் - வில்லியாக மாறிய நல்லி
    X

    திருமணம் நிறுத்தம் - வில்லியாக மாறிய "நல்லி"

    • திருமண நிச்சயதார்த்ததிற்கான ஏற்பாடுகளை பெண் வீட்டார் செய்தனர்.
    • விருந்தில் நல்லி எலும்பு கறி இல்லாதது தங்களை அவமதிக்கும் செயலாக உள்ளது என மணமகன் வீட்டார் கூறியுள்ளனர்.

    மணப்பெண்ணின் வீட்டார் நிச்சயதார்த்த நிகழ்வில் நல்லி எலும்பு வழங்காததால் மணமகன் குடும்பத்தினர் கோபமடைந்து திருமணத்தை நிறுத்தியுள்ள சம்பவம் நடைபெற்றுள்ளது.

    அதன் விவரம் வருமாறு:-

    நிஜாமாபாத்தை சேர்ந்த பெண்ணுக்கும், ஜக்தியாலைச் சேர்ந்தவருக்கும் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது. விரைவில் திருமணமும் நடைபெற இருந்தது. இதையடுத்து திருமண நிச்சயதார்த்ததிற்கான ஏற்பாடுகளை பெண் வீட்டார் செய்தனர்.

    நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் மணமகளின் குடும்பத்தினர், அவர்களது குடும்பத்தினர் மற்றும் மணமகனின் உறவினர்கள் உள்ளிட்ட விருந்தினர்களுக்கு அசைவ உணவு வகைகளை ஏற்பாடு செய்திருந்தனர்.

    நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்குப் பிறகு, ஆட்டிறைச்சியின் நல்லி எலும்பு வழங்கப்படவில்லை என்று விருந்தினர்கள் சுட்டிக்காட்டியதால் சண்டை வெடித்தது. விருந்தில் நல்லி எலும்பு கறி இல்லாதது தங்களை அவமதிக்கும் செயலாக உள்ளது என மணமகன் வீட்டார் கூறியதை தொடர்ந்து இருதரப்பினரிடையே வாக்குவாதம் முற்றி, திருமணம் நிறுத்தப்பட்டது.

    Next Story
    ×