என் மலர்tooltip icon

    இந்தியா

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் நாளை விஷுக்கனி தரிசனம்
    X

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் நாளை விஷுக்கனி தரிசனம்

    • நாளை காலை 7 மணி வரை பக்தர்கள் விசுக்கனி தரிசனம் செய்யலாம்.
    • வருகிற 18-ந்தேதி வரை சபரிமலை கோவில் நடை திறந்திருக்கும்.

    சபரிமலை ஐயப்பன் கோவில் நடை பங்குனி ஆராட்டு மற்றும் சித்திரை விசு சிறப்பு பூஜைகளுக்காக கடந்த 1-ந்தேதி திறக்கப்பட்டது. மறுநாள் (2-ந்தேதி) கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது.

    10 நாட்கள் நடைபெற்ற ஆராட்டு திருவிழா முடிவடைந்த நிலையில் சித்திரை விசுக்கனி தரிசனம் நாளை (14-ந்தேதி) நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு நாளை அதிகாலை 4 மணிக்கு சபரிமலை கோவில் நடை திறக்கப்படுகிறது.

    நாளை காலை தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு கோவில் தந்திரி மற்றும் மேல்சாந்தி ஆகியோர் கை நீட்டமாக நாணயங்களை வழங்குகின்றனர். காலை 7 மணி வரை பக்தர்கள் விசுக்கனி தரிசனம் செய்யலாம். இதற்காக பக்தர்கள் சபரிமலையில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.

    வருகிற 18-ந்தேதி வரை சபரிமலை கோவில் நடை திறந்திருக்கும். அன்று இரவு 10 மணிக்கு நடை சாத்தப்படுகிறது.

    Next Story
    ×