search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    5-வது மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை - பதற வைக்கும் வீடியோ
    X

    5-வது மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை - பதற வைக்கும் வீடியோ

    • அங்கிருந்தவர்கள் உடனடியாக ரேணு ஸ்ரீயை மீட்டு அருகிலுள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
    • எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம் குக்கட்பல்லி எல்லம்பண்டா பகுதியைச் சேர்ந்தவர் ரேணு ஸ்ரீ (வயது18 ). இவர் ஐதராபாத் அடுத்த ருத்ராமில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் என்ஜினியரிங் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

    நேற்று பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள 5-வது மாடியில் சுற்றுச்சுவரின் வெளிப்புறமாக அமர்ந்தார்.

    மேலும் செல்போனை பார்த்துக் கொண்டிருந்தார்.

    அங்கிருந்த மாணவர்கள் அவர் அமர்ந்திருப்பதை கண்டு மாடியில் இருந்து கீழே இறங்குமாறு கத்தினர். இதையடுத்து சுவரிலிருந்து கீழே இறக்குவதற்காக அவளை நோக்கி மாணவர்கள் ஓடினர்.

    மேலும் சிலர் இந்த காட்சிகளை செல்போனில் வீடியோவாக பதிவு செய்தனர். ஆனால் திடீரெனசெல்போனை சுவரில் வைத்துவிட்டு மாணவி கீழே குதித்தார்.

    அங்கிருந்தவர்கள் உடனடியாக ரேணு ஸ்ரீயை மீட்டு அருகிலுள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலே மாணவி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்த போலீசார் அங்கு சென்றனர்.

    கட்டிடத்தில் இருந்து குதிக்கும் முன்பு யாருக்காவது போன் செய்தாரா? அல்லது மெசேஜ் அனுப்பினாரா? என்கிற கோணத்தில் விசாரணை நடத்த செல்போனை கைப்பற்றினர்.

    அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மாணவி தற்கொலை தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் தற்போது பரவி வருகிறது. இது நெஞ்சை பதற வைக்கிறது.

    Next Story
    ×