search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    துணை ஜனாதிபதி தேர்தலில் 92.9 சதவீத வாக்குப்பதிவு- வாக்கு எண்ணிக்கை தொடங்கியது
    X

    ஜெகதீப் தன்கர், மார்கரெட் ஆல்வா

    துணை ஜனாதிபதி தேர்தலில் 92.9 சதவீத வாக்குப்பதிவு- வாக்கு எண்ணிக்கை தொடங்கியது

    • துணை ஜனாதிபதி தேர்தலில் மொத்தம் உள்ள 780 எம்.பி.க்களில் 725 பேர் வாக்களித்தனர்.
    • பாஜக கூட்டணி சார்பில் ஜெகதீப் தன்கர், எதிர்க்கட்சிகளின் சார்பில் மார்கரெட் ஆல்வா ஆகியோர் போட்டி

    புதுடெல்லி:

    இந்தியாவின் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் வரும் 10ம் தேதியுடன் நிறைவடைய உள்ளதால், அடுத்த துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று நடந்தது. வாக்குப்பதிவு காலை 10 மணிக்குத் தொடங்கி 5 மணிக்கு நிறைவடைந்தது. மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் வாக்களித்தனர்.

    இந்த தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் மேற்கு வங்காள முன்னாள் ஆளுநர் ஜெகதீப் தன்கர் (71), எதிர்க்கட்சிகளின் சார்பில் மார்கரெட் ஆல்வா (80) ஆகியோர் போட்டியிட்டனர்.

    மாலை 5 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்ததும் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் சேர்ந்து 780 எம்.பி.க்கள் உள்ளனர். இதில், 725 பேர் வாக்களித்தனர். 92.9 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.

    Next Story
    ×