குடியரசு துணைத் தலைவர் தேர்தல்- மார்கரெட் ஆல்வா வேட்புமனு தாக்கல்

தேர்தல்களை கண்டு பயப்படும் ஆள் நான் இல்லை.இந்திய அரசியலமைப்பிற்கு சேவை செய்வதே எனது ஒரே கடமை.
மார்கரெட் ஆல்வா வேட்புமனு தாக்கல்
மார்கரெட் ஆல்வா வேட்புமனு தாக்கல்
Published on

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் சார்பில் பொது வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூன்னாள் எம்.பியும், பாராளுமன்ற முன்னாள் சபாநாயகருமான மார்கரெட் ஆல்வா இன்று தமது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

அப்போது ராகுல்காந்தி, மல்லிகார்ஜூனன் கார்க்கே, சரத்பவார், சீதாராமன் யெச்சூரி, திருச்சி சிவா உள்பட பல்வேறு எதிர்க்கட்சிகளை சேர்ந்த தலைவர்கள், எம்.பி.க்கள். உடன் இருந்தனர். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மார்கரெட் ஆல்வா தெரிவித்துள்ளதாவது:

குடியரசு துணைத் தலைவர் பதவிக்கு எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக முன்னிறுத்தப்படுவது, எனக்கு கிடைத்துள்ள பாக்கியம் மற்றும் மரியாதை. எனது வேட்புமனுவை ஆதரிக்க எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தது யதார்த்த இந்தியாவின் உருவகம்.

தேர்தல்களை கண்டு பயப்படும் ஆள் நான் இல்லை. அவை என்னை பயமுறுத்தவில்லை. வேற்றுமையில் ஒற்றுமையே நமது பலம். ஜனநாயகத்தின் தூண்களை நிலைநிறுத்தவும், நாட்டின் ஜனநாயக நிறுவனங்களை வலுப்படுத்தவும் போராடுகிறோம்.

இந்தியாவுக்காக நாங்கள் போராடுகிறோம். அனைவருக்கும் மரியாதை கிடைக்கும் இந்தியா வேண்டும். 50 ஆண்டுகளுக்கும் மேலாக பொது வாழ்வில் செலவிட்டதற்காக, ஒரு அங்கீகாரம் கிடைத்திருப்பதாக கருதுகிறேன். இந்திய அரசியலமைப்பிற்கு அச்சமின்றி சேவை செய்வதே எனது ஒரே கடமையாக கொண்டுள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com