என் மலர்tooltip icon

    இந்தியா

    யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வு... முக்கிய அறிவிப்பு வெளியானது!
    X

    யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வு... முக்கிய அறிவிப்பு வெளியானது!

    • இன்று முதல் வரும் 24ம் தேதி வரை தேர்வாணைய இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்
    • மே 24ம் தேதி முதல்நிலைத் தேர்வும், அதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 21ம் தேதி முதன்மைத் தேர்வும் நடக்க உள்ளது

    மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் 2026-ஆம் ஆண்டிற்கான சிவில் சர்வீஸ் தேர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட 933 பணியிடங்களுக்கான தேர்வுக்கு இன்று முதல் வரும் 24ம் தேதி வரை upsconline.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்துள்ளது.

    விண்ணப்ப அறிவிப்பு வெளியீட்டுடன், 2026-ஆம் ஆண்டு சிவில் சர்வீசஸ் தேர்வின் மூலம் நிரப்பப்படவுள்ள காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை, தேர்வு முறை மற்றும் இதர விவரங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. யுபிஎஸ்சி தேர்வு அட்டவணைப்படி, முதல்கட்ட தேர்வு மே.24ஆம் தேதியும், முதன்மைத் தேர்வு (Mains) ஆகஸ்ட் 21-ம் தேதியும் நடைபெற உள்ளது. இதனைத்தொடர்ந்து நேர்காணல் நடைபெறும்.

    கடந்த ஆண்டு, 979 காலியிடங்களை ஆணையம் வழங்கியது . 2024 ஆம் ஆண்டில், 1,105 காலியிடங்கள் நிரப்பப்பட்டன. மொத்த காலியிடங்களில், 33 காலியிடங்கள், அடிப்படை மாற்றுத்திறனாளிகளுக்கான பிரிவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. அவற்றில், ஏழு காலியிடங்கள் கண்பார்வையற்றோர் மற்றும் குறைந்த பார்வைத்திறன் உடையோர்க்கும், 11 காலியிடங்கள் காது கேளாதோர் மற்றும் குறைவான கேட்கும் திறன் உடையோர்க்கும், இயக்கக் குறைபாடு (Locomotor disability) உள்ளவர்களுக்கு எட்டு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன; இதில் பெருமூளை வாதம், தொழுநோய் குணமானவர்கள், உயரம் குறைந்தவர்கள், ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் தசைச் சிதைவு நோய் உள்ளவர்களும் அடங்குவர். இன்னும் பிற குறைபாடு உள்ளவர்களுக்கு ஏழு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

    Next Story
    ×