என் மலர்
இந்தியா

உ.பி.யில் 2.89 கோடி பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம்
- உத்தர பிரதேச மாநிலத்தில் வாக்காளர் பட்டியலில் 12,55,56,025 பேர் இடம் பிடித்திருந்தனர்.
- 18.70 சதவீதம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர்.
உத்தர பிரதேச மாநிலத்தில் கடந்த ஆண்டு நவம்பர்- டிசம்பர் மாதங்களில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் பணியை தேர்தல் ஆணையம் மேற்கொண்டது. டிசம்பர் 26-ந்தேதி வரை மனுக்கள் பூர்த்தி செய்யப்பட்டு பெறப்பட்டன. பின்னர் அவைகள் பதிவேற்றம் செய்யப்பட்டன.
இந்த நிலையில் இன்று வாக்காளர் வரைவு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 2025 அக்டோபர் 27-ந்தேதி வரை உத்தர பிரதேச மாநில வாக்காளர் பட்டியலில் 15,44,30,092 பேர் இடம் பிடித்திருந்தனர். SIR படிவத்தை 12,55,56,025 வாக்காளர்கள் பூர்த்தி செய்து ஒப்படைத்துள்ளனர். இது 81.30 சதவீதம் வாக்காளர்கள் ஆகும். இதன் மூலம் 18.70 சதவீதம் வாக்காளர்கள் அல்லது 2.89 கோடி வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.
இதில் 46.23 லட்சம் வாக்காளர்கள் உயிரிழந்துள்ளனர். 2.57 கோடி வாக்காளர்கள் நிரந்தரமாக வேறு மாநிலத்திற்கு இடம் பெயர்ந்துள்ளனர். அல்லது படிவத்தை பூர்த்தி செய்து கொடுத்திருக்காதவர்கள். 25.47 லட்சம் வாக்காளர்கள் ஒன்றிற்கு மேற்பட்ட இடத்தில் இடம் பிடித்தவர்கள் என உத்தர பிரதேச மாநில தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
ஆட்சேபனை தெரிவிப்பவர்கள், விடுபட்டவர்கள் ஜனவரி 6-ந்தேதியில் இருந்து பிப்ரவரி 6-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.






