search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    இந்திரா காந்தி படுகொலையை கொண்டாடிய விவகாரம்: கனடாவுக்கு நல்லதல்ல - வெளியுறவு மந்திரி கண்டனம்
    X

    வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் 

    இந்திரா காந்தி படுகொலையை கொண்டாடிய விவகாரம்: கனடாவுக்கு நல்லதல்ல - வெளியுறவு மந்திரி கண்டனம்

    • படுகொலையை ஆதரிப்பது போன்று இந்தக் கண்காட்சி அணிவகுப்பு நடந்துள்ளது என குற்றச்சாட்டு எழுந்தது.
    • இதற்கு இந்தியாவுக்கான கனடா தூதர் கேமரன் மெக்கே கண்டனம் தெரிவித்துள்ளார்.

    புதுடெல்லி:

    கனடாவின் பிராம்ப்டன் நகரில் நடந்த கண்காட்சி அணிவகுப்பு ஒன்றில், இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி சுட்டு கொலை செய்யப்படுவது போன்ற சிலைகள் வடிவமைக்கப்பட்டு, காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது. இந்த வீடியோ சமூக ஊடகத்தில் பரவியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    படுகொலையை ஆதரிப்பது போன்று இந்தக் கண்காட்சி அணிவகுப்பு நடந்துள்ளது என குற்றச்சாட்டு எழுந்தது. அதில் ரத்த காயங்களுடன் இந்திரா காந்தியின் சிலை வீடியோவில் காட்டப்பட்டுள்ளது.

    கனடாவில் நடந்த அணிவகுப்பு வீடியோ பற்றி உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை.

    இந்நிலையில், பா.ஜ.க அரசின் 9 ஆண்டு கால சாதனையை விளக்கும் பத்திரிகையாளர் சந்திப்பு டெல்லியில் நடைபெற்றது. இதில் வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் கலந்துகொண்டு பேசினார். அப்போது, முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி படுகொலையை கனடாவில் கொண்டாடிய விவகாரம் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.

    இதற்கு பதிலளித்து பேசிய ஜெய்சங்கர், இதில் பெரிய விவகாரம் தொடர்பில் இருக்கும் என நான் நினைக்கிறேன். யார் வேண்டுமென்றாலும் செய்யக்கூடிய, வாக்கு வங்கி அரசியலுக்கான தேவையை கடந்து, நாம் புரிந்துகொள்ள தவறிய விஷயம் என்னவென்றால்... பிரிவினைவாதிகள், பயங்கரவாதிகள், வன்முறையை ஆதரிப்பவர்களுக்கு இடம் அளிக்கப்பட்டுள்ள ஒரு பெரிய விவகாரம் இதில் மறைந்துள்ளது. இது உறவுகளுக்கு நல்லதல்ல என நான் நினைக்கிறேன். கனடாவுக்கும் நல்லதல்ல. கனடாவில் நடந்த ஏதோ ஒரு விஷயம் என்றில்லாமல், அதிர்ச்சி தரக்கூடிய ஒன்று என தெரிவித்துள்ளார்.

    கனடாவின் செயலுக்கு இந்தியாவுக்கான கனடா தூதர் கேமரன் மெக்கே கண்டனம் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×