search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    தடுப்பு நடவடிக்கைகளை உறுதி செய்க... மாநிலங்களுக்கு மத்திய அமைச்சர் வலியுறுத்தல்
    X

    தடுப்பு நடவடிக்கைகளை உறுதி செய்க... மாநிலங்களுக்கு மத்திய அமைச்சர் வலியுறுத்தல்

    • சில மாநிலங்களில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்த வண்ணம் உள்ளது.
    • குளிர்காலம், திருவிழா காலங்கள் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்.

    இந்தியாவில் மீண்டும் மெல்லமெல்ல கொரோனா தொற்று தலைதூக்கி வருகிறது. குளிர்காலம் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் ஏற்கனவே மாநிலங்களுக்கு வலியுறுத்தியுள்ளது.

    ஒரு சில மாநிலங்களில் முதியோர் வெளியில் செல்லும்போது மாஸ்க் அணிய வேண்டும் என அறிவிறுத்தப்பட்டுள்ளது. சில மாநிலங்களில் கொரோனா வைரஸ் தொற்றுக்கான பரிசோதனையை அதிகரிக்க தொடங்கியுள்ளது.

    இந்த நிலையில் மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களை வலியுறுத்தியுள்ளார்.

    மன்சுக் மாண்டவியா இதுகுறித்து கூறுகையில் "குளிர்காலத்தின் கடுங்குளிர் மற்றும் வரவிருக்கும் திருவிழாக்கள் ஆகியவற்றை கணக்கில் எடுத்துக் கொண்டு பாதுகாப்பு நடவடிக்கைகளை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச மாநிலங்கள் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

    தற்போது இணைந்து பணியாற்றும் நேரம் இது. நாம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம். ஆனால், அச்சம் அடையத் தேவையில்லை. மருத்துவமனைகளை தயார்படுத்தல், கண்காணிப்பு பணியை அதிகரித்தல், மக்களுடன் பயனுள்ள தொடர்பு குறித்து ஒத்திகை நடத்தி தயாராக இருப்பது அவசியம்.

    ஒவ்வொரு மாதத்திற்கும் இடையில் அனைத்து மருத்துவமனையிலும் ஒத்திகை நடத்தப்பட வேண்டும். மத்திய அரசிடம் இருந்து அனைத்து உதவிகளும் கிடைக்கும் என மாநிலங்களுக்கு உறுதி அளிக்கிறேன். சுகாதாரம் அரசியலுக்கான இடம் அல்ல.

    இவ்வாறு மன்சுக் மாண்டியா தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×