என் மலர்
இந்தியா

உத்தரகாண்டில் நிலநடுக்கம்- ரிக்டர் அளவில் 3.8ஆக பதிவு
- நிலநடுக்கம் 3.8 ரிக்டர் அளவில் பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
- சாலைகளில் பெரிய அளவில் விரிசல்கள் விழுந்து மக்கள் வாழ்வதற்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது.
டேராடூன்:
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பித்தோராகர் நகரில் இன்று காலையில் நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 8.58 மணியளவில் பித்தோராகர் நகருக்கு 23 கிலோ மீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கம் 3.8 ரிக்டர் அளவில் பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் உயிர் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக உடனடியாக தகவல் வெளியாகவில்லை.
உத்தரகாண்டின் ஜோஷிமத் நகரத்தில் வீடுகள், கட்டிடங்கள் மற்றும் சாலைகளில் பெரிய அளவில் விரிசல்கள் விழுந்து மக்கள் வாழ்வதற்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது.
இந்த நிலையில் இன்று ஏற்பட்டுள்ள நிலநடுக்கம் உத்தரகாண்ட் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Next Story






