என் மலர்tooltip icon

    இந்தியா

    பல்கலைக்கழக போலி சான்றிதழ் தயாரிப்பு- 3 பேர் கைது
    X

    பல்கலைக்கழக போலி சான்றிதழ் தயாரிப்பு- 3 பேர் கைது

    • போலி சான்றிதழ் குறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு புகார்கள் வந்தன.
    • தலைமறைவாக உள்ள டெல்லியை சேர்ந்த ஷிவானியை போலீசார் தேடி வருகின்றனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், சார்மினார், சந்திராயண குட்டா பகுதியை சேர்ந்தவர் முகமது கலிமுதீன் (வயது 45). இவரது நண்பர்கள் டெல்லியை சேர்ந்த ஷிவானி, அப்பர் பள்ளி முகமது பெரோஸ் ( 44) சார்வான் மாருதி நகரை சேர்ந்த அப்துல் பாசித் அலி ஆகியோர் கூட்டாக சேர்ந்து ஆந்திராவில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரி சான்றிதழ்களை போலியாக தயார் செய்துள்ளனர்.

    தயாரிக்கப்பட்ட போலி சான்றிதழ்களை லட்சக்கணக்கில் விற்பனை செய்துள்ளனர். போலி சான்றிதழ் குறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு புகார்கள் வந்தன.

    போலீசார் போலி சான்றிதழ் தயாரித்து விற்பனை செய்து வருபவர்கள் குறித்து விசாரணை செய்து வந்தனர். விசாரணையில் முகமது கலிமுத்தீன், ஷிவானி முகமது பிரோஸ், அப்துல் பாசித் அலி ஆகியோர் போலி சான்றிதழ் தயாரித்து விற்பனை செய்தது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கம்ப்யூட்டர் பிரிண்டர் ஹார்ட் டிஸ்க் 3 செல்போன் உள்ளிட்ட ஏராளமான எலெக்ட்ரானிக் பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள டெல்லியை சேர்ந்த ஷிவானியை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×