search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மாநிலங்களுக்கான வரிப் பகிர்வின் கீழ் தமிழகத்திற்கு ரூ.4,758.78 கோடி- மத்திய அரசு விடுவித்தது
    X

    மத்திய நிதி அமைச்சகம் 

    மாநிலங்களுக்கான வரிப் பகிர்வின் கீழ் தமிழகத்திற்கு ரூ.4,758.78 கோடி- மத்திய அரசு விடுவித்தது

    • இரண்டு தவணைகளுக்குரிய தொகையை மத்திய அரசு வழங்கியுள்ளது.
    • மத்திய அரசின் உறுதிபாட்டின்படி இந்த தொகை விடுவிக்கப் பட்டுள்ளது.

    மாநில அரசுகளுக்கான வரிப்பகிர்வின் கீழ் இரண்டு தவணைகளை மத்திய அரசு விடுவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய நிதி அமைச்சகம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது

    மாநில அரசுகளுக்கு வரிப்பகிர்வின் வழக்கமான மாதாந்திர தொகையான ரூ. 58,332.86 கோடிக்கு பதிலாக, இரண்டு தவணைகளுக்குரிய ரூ. 1,16,665.75 கோடியை நேற்று (ஆகஸ்ட் 10, 2022) மத்திய அரசு விடுவித்துள்ளது.

    மாநில அரசுகள் தங்களது மூலதனம், வளர்ச்சி செலவுகளை உயர்த்துவதற்கு அதிகாரம் அளிக்கும் மத்திய அரசின் உறுதி பாட்டின்படி இந்த தொகை விடுவிக்கப்பட்டுள்ளது. இதன்படி தமிழகத்திற்கு ரூ. 4,758.78 கோடி வழங்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×