search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ராகுல் காந்தி பிரதமராக வேண்டும் என எனது தந்தை கனவு கண்டார்- சர்மிளா
    X

    ராகுல் காந்தி பிரதமராக வேண்டும் என எனது தந்தை கனவு கண்டார்- சர்மிளா

    • அனைத்து தரப்பு மக்களுக்கும் சேவை செய்து ஒன்றிணைப்பது காங்கிரஸ் கட்சி மட்டும் தான்.
    • தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறுவதற்கு நானும் ஒரு காரணமாக இருந்தேன் .

    திருப்பதி:

    ஆந்திராவின் முன்னாள் முதல்-மந்திரி ராஜசேகர ரெட்டியின் மகளும் தற்போதைய முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டியின் தங்கையுமான ஒய்.எஸ். சர்மிளா நேற்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல்காந்தி முன்னிலையில் தன்னை காங்கிரஸ் கட்சியில் இணைத்து கொண்டார்.

    ராகுல் காந்தி பிரதமராக வேண்டும் என எனது தந்தை கனவு கண்டார். அவரது கனவை நிறைவேற்ற அவர் வாழ்ந்த கட்சியான தாய் வீடான காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து இருக்கிறேன்.

    நாட்டின் மிகப்பெரிய மத சார்பற்ற கட்சி காங்கிரஸ். காங்கிரஸில் தனக்கு வழங்கப்படும் எந்த பொறுப்பையும் நிறைவேற்றுவேன். அனைத்து தரப்பு மக்களுக்கும் சேவை செய்து ஒன்றிணைப்பது காங்கிரஸ் கட்சி மட்டும் தான்.

    தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறுவதற்கு நானும் ஒரு காரணமாக இருந்தேன் என்பதை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×