என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
சேலையை மாற்றுவது போல கணவர்களை மாற்றி உல்லாச வாழ்க்கை வாழ்ந்த இளம்பெண் கைது
- சேலையை மாற்றுவது போல கணவர்களை மாற்றி உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார்.
- ஆண் பாவம் பொல்லாதது என்பார்கள். அதுபோல பல ஆண்களை ஆசை காட்டி திருமண மோசடி செய்த ஷாஹீன் தற்போது சிறைக்கு பின்னால் நின்று கம்பி எண்ணுகிறார்.
ஜம்முகாஷ்மீர்:
ஜம்முகாஷ்மீர் மாநிலம் ராசவுரி மாவட்டம் நவ்ஜூரா நகரைச் சேர்ந்தவர் ஷாஹீன் அக்தர் (வயது 30). இவர் அதே பகுதியைச் சேர்ந்த முகமது அல்டாப் என்பவரை திருமணம் செய்த நிலையில், முகமது அல்டாப் போலீசில் கடந்த 5-ந்தேதி ஒரு புகார் மனு கொடுத்தார்.
அதில் திருமணத்திற்கு பிறகு ஷாஹீன் அக்தர் தன்னை வஞ்சிப்பதாகவும், நெருங்க விடாமல் புறக்கணிப்பதாகவும் தெரிவித்து இருந்தார். அதன் பேரில் ஷாஹீன் அக்தரிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியானது.
ஷாஹீன் அக்தர் இதுவரை 12 ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டது தெரியவந்தது. அவர் அளித்த தகவலை கேட்ட போலீசாருக்கே தலை சுற்றியது. மேலும் அவர் அடுத்தடுத்து திருமணம் செய்துகொண்ட ஆண்களிடம் நகை, பணம் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்களை அபகரித்துக்கொண்டு தலைமறைவாகி உள்ளார்.
சேலையை மாற்றுவது போல கணவர்களை மாற்றி உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
தற்போது வரை அவரால் பாதிக்கப்பட்ட ஆண்களின் எண்ணிக்கை 12 (ஒரு டஜன்) என்று தெரியவந்துள்ளது. ஆனாலும் அவர்களின் பெயர், விபரம் குறித்த தகவல்களை போலீசார் தெரிவிக்கவில்லை.
இதுகுறித்து அந்த பெண் மீது புகார் கொடுத்த முகமது அல்தாப் கூறியதாவது:-
நான் திருமணத்திற்கு வரன் தேடிக் கொண்டு இருந்தேன். அப்போது கல்யாண தரகர் ஒருவர்தான் ஷாஹீன் அக்தரை அறிமுகப்படுத்தினார். அவர் மீதான நம்பிக்கையின் காரணமாக ஷாஹீன் அக்தரை நான் திருமணம் செய்துகொண்டேன்.
அதன் பிறகு முதல் நான்கு மாதங்கள் என்னுடன் ஷாஹீன் அக்தர் மகிழ்ச்சியுடன் குடும்பம் நடத்தினார். பின்னர் பல்வேறு பொய்யான தகவல்களை கூறி என்னிடம் இருந்த நகை மற்றும் பணத்தை அபகரித்துக்கொண்டார். பின்னர் சில நாட்களில் என்னிடம் இருந்து அவர் பிரிந்து சென்று விட்டார். இதேபோல் ஏராளமான ஆண்களை அவர் ஏமாற்றி திருமணம் செய்து நகை, பணத்தை மோசடி செய்துள்ளார். எனவே அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
முகமது அல்தாப் புகாரின் அடிப்படையில், இந்திய தண்டனை சட்டம் 420 மற்றும் 120 பி ஆகிய பிரிவுகள் ஷாஹீன் அக்தர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கடந்த 14-ந்தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதையடுத்து மத்திய காஷ்மீர் புட்கம் நீதிமன்றத்தில் ஷாஹீன் அக்தர் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். அப்போதுதான் இந்த பெண் ஏற்கனவே திருமணம் செய்து ஏமாற்றிய ஆண்களுக்கு இவரது திருமண நாடகம் தெரியவந்தது.
ஆண் பாவம் பொல்லாதது என்பார்கள். அதுபோல பல ஆண்களை ஆசை காட்டி திருமண மோசடி செய்த ஷாஹீன் அக்தர் தற்போது சிறைக்கு பின்னால் நின்று கம்பி எண்ணுகிறார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்