என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
திரிபுராவில் பாஜக அரசு பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு
- முதல்வர் மாணிக் சாஹா தனது அரசின் ராஜினாமா கடிதத்தை ஆளுநர் சத்யதேவ் நரேன் ஆர்யாவிடம் நேற்று அளித்தார்.
- பிரதமர் மோடியின் திரிபுரா மாநில பயணம் தொடர்பாக மூத்த அதிகாரிகளுடன் தலைமைச் செயலாளர் எஸ்.கே. சின்ஹா ஆலோசனை.
சமீபத்தில் நடைபெற்ற திரிபுரா சட்டசபைத் தேர்தலில் 60 உறுப்பினர்களைக் கொண்ட தொகுதியில் பாஜக 32 இடங்களையும், அதன் கூட்டணிக் கட்சியான ஐபிஎஃப்டி ஒரு இடத்தையும் பிடித்து ஆட்சியை கைப்பற்றியது.
தொடர்ந்து, முதல்வர் மாணிக் சாஹா தனது அரசின் ராஜினாமா கடிதத்தை ஆளுநர் சத்யதேவ் நரேன் ஆர்யாவிடம் நேற்று அளித்தார். புதிய அரசு மார்ச் 8ம் தேதி பதவியேற்பதாகவும், விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளதாகவும் ஆளுநர் ஏற்கனவே செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், திரிபுராவில் வரும் மார்ச் 8 ம் தேதி நடைபெறும் பாஜக- ஐபிஎஃப்டி அரசு பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க இருப்பதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும், பிரதமர் மோடியின் திரிபுரா மாநில பயணம் தொடர்பாக மூத்த அதிகாரிகளுடன் தலைமைச் செயலாளர் எஸ்.கே. சின்ஹா ஆலோசனை நடத்துகிறார். இதற்காக சிறப்பு பாதுகாப்பு குழு திரிபுரா வருகிறது என்றும் போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.
திரிபுராவில் உள்ள விவேகானந்தர் மைதானத்தில் புதிய அரசு பதவியேற்பு விழா நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்