search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    சிறுவர்கள் மற்றும் மாணவர்களுடன் ரக்ஷா பந்தன் கொண்டாடிய குடியரசு தலைவர்
    X

    சிறுவர்கள் மற்றும் மாணவர்களுடன் ரக்ஷா பந்தன் கொண்டாடிய குடியரசு தலைவர்

    • நாடு முழுக்க ரக்ஷா பந்தன் கொண்டாட்டங்கள் கலைகட்டியது.
    • பெண்கள் தாங்கள் சகோதரர்களாக கருதும் ஆண்களுக்கு ராக்கி கயிறு கட்டி மகிழ்ந்தனர்.

    சகோதர பாசத்தை வெளிப்படுத்தும் நோக்கத்தில் கொண்டாடப்படும் ரக்ஷா பந்தன் தினத்தையொட்டி இன்று நாடு முழுவதும் பெண்கள் தாங்கள் சகோதரர்களாக கருதும் ஆண்களுக்கு ராக்கி கயிறுகளை கட்டி மகிழ்ந்தனர்.

    நாடு முழுக்க ரக்ஷா பந்தன் கொண்டாட்டம் நடைபெற்று வரும் நிலையில், குடியரசு தலைவர் திரவுபதி முர்மு ஜனாதிபதி மாளிகையில் ரக்ஷா பந்தன் கொண்டாடினார். இந்த ஆண்டு ரக்ஷா பந்தனுக்கு பல்வேறு பள்ளிகள் மற்றும் நிறுவனங்களை சேர்ந்த சிறுவர்கள் மற்றும் மாணவர்களை ஜனாதிபதி மாளிகைக்கு அழைத்து, அர்களுடன் ரக்ஷா பந்தன் கொண்டாடினார் திரவுபதி முர்மு.

    ஜனாதிபதி மாளிகையில், திரவுபதி முர்முவின் ரக்ஷா பந்தன் கொண்டாட்டம் தொடர்பான அறிவிப்பு மற்றும் புகைப்படங்கள், குடியரசு தலைவரின் அதிகாரப்பூர்வ எக்ஸ் ( முன்பு டுவிட்டர்) தளத்தில் டுவீட் செய்யப்பட்டு உள்ளது.

    Next Story
    ×