என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
வேலை வாங்கித்தருவதாக பண மோசடி- மலையாள நடிகர் கைது
- வாகனத்தில் சென்று கொண்டிருந்த அவரை போலீசார் மடக்கிபிடித்து கைது செய்துள்ளனர்.
- பண மோசடி வழக்கில் நடிகர் கைது செய்யப்பட்டிருப்பது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியை சேர்ந்தவர் கலாபவன் சோபி ஜார்ஜ்(வயது56). மலையாள பட இயக்குனர் மற்றும் நடிகரான இவர், தனது குடும்பத்தினருடன் கொல்லம் சாத்தன்னூர் நெல்லிமடம் காக்கநாடு பகுதியில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் புல்ப்பள்ளி பகுதியை சேர்ந்த ஒருவரிடம் சுவிட்சர்லாந்தில் வேலை வாங்கிக்தருவதாக கூறி கடந்த 2021-2022 ஆண்டுகளில் சோபி ஜார்ஜ் ரூ.3லட்சம் பணத்தை பல்வேறு தவணைகளாக வாங்கியதாக கூறப்படுகிறது. ஆனால் அவர் கூறியபடி பணம் கொடுத்த நபருக்கு வேலை வாங்கிக் கொடுக்கவில்லை என தெரிகிறது.
ஆகவே அந்த நபர் தன்னிடம் பணம் மோசடி செய்து விட்டதாக சுல்தான்பத்தேரி போலீஸ் நிலையத்தில் சோபி ஜார்ஜ் மீது புகார் செய்தார். அதன்பேரில் வழக்குப் பதிந்து விசாரணை நடத்திய போலீசார், சோபி ஜார்ஜை கைது செய்தனர்.
வாகனத்தில் சென்று கொண்டிருந்த அவரை போலீசார் மடக்கிபிடித்து கைது செய்துள்ளனர். மேலும் அவரது விலையுயர்ந்த சொகுசு காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
சோபி ஜார்ஜ் இது போன்று வயநாடு பகுதியை சேர்ந்த ஏராளமானோரிடம் வெளிநாடுகளில் வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ.25லட்சம் வரை மோசடி செய்திருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் மீது வயநாட்டில் 6 வழக்குகள் உள்பட 26 வழக்குகள் பதியப்பட்டுள்ளன.
மோசடி புகார் தொடர்பாக சோபி ஜார்ஜிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பண மோசடி வழக்கில் நடிகர் கைது செய்யப்பட்டிருப்பது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்