search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஜெயலலிதாவின் பொருட்களை ஒப்படைக்க கோரி கர்நாடகா அரசு வழக்கறிஞர் கடிதம்
    X

    ஜெயலலிதாவின் பொருட்களை ஒப்படைக்க கோரி கர்நாடகா அரசு வழக்கறிஞர் கடிதம்

    • 28 வகையான பொருட்களை ஒப்படைக்க வேண்டும்.
    • ஜெயலலிதாவின் 30 கிலோ தங்க, வைர நகைகளை தவிர மற்ற எதுவும் கர்நாடகா நீதிமன்றத்தில் இல்லை.

    சொத்துக்குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட ஜெயலலிதாவின் பொருட்களை ஒப்படைக்க கோரி தமிழக லஞ்ச ஒழிப்பு துறைக்கு கர்நாடகா அரசு வழக்கறிஞர் கடிதம் எழுதியுள்ளார்.

    அக்கடிதத்தில், விலை மதிப்புடைய கடிகாரம், 11 ஆயிரம் புடவைகள், பரிசு பொருட்கள் உட்பட 28 வகையான பொருட்களை ஒப்படைக்க வேண்டும். ஜெயலலிதாவின் 30 கிலோ தங்க, வைர நகைகளை தவிர மற்ற எதுவும் கர்நாடகா நீதிமன்றத்தில் இல்லை என வழக்கறிஞர் தெரிவித்து உள்ளார்.

    பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை ஏலம் விட கர்நாடகா அரசு சார்பில் அரசு வழக்கறிஞர் கிரண் எஸ். ஜவாலி ஏற்கனவே நியமனம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×