என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
துருக்கி நிலநடுக்க மீட்பு பணியில் இந்திய ராணுவ வீரர்கள்- பொதுமக்கள் கட்டித்தழுவி நன்றி தெரிவித்தனர்
- கான்கிரீட் இடிபாடுகளில் சிக்கியிருப்பவர்களின் இதயத் துடிப்பைக் கண்டறியும் ரேடார்களை பயன்படுத்தி வருகின்றனர்.
- இடிபாடுகளில் சிக்கி உள்ளவர்களை மீட்டு சிகிச்சை அளித்து வரும் இந்திய ராணுவ வீரர்கள் மற்றும் டாக்டர்களை அந்த பகுதி மக்கள் கட்டி தழுவி நன்றி தெரிவித்தனர்.
திருப்பதி:
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கியின் ஹடாய் மாகாணத்தில் இந்திய ராணுவம் தற்காலிக மருத்துவமனை அமைத்து அவசர மருத்துவ சேவைகளை வழங்கி வருகிறது. அங்கு தேவைப்படுபவர்களுக்கு அறுவை சிகிச்சைகளை ராணுவ டாக்டர்கள் செய்து வருகின்றனர்.
தற்காலிக மருத்துவமனையில் எந்திரங்கள், வென்டிலேட்டர்கள் மற்றும் அறுவை சிகிச்சை அரங்குகள் உள்ளிட்ட வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. காசியான்டெப் பகுதியில் 6 வயது குழந்தை மீட்கப்பட்டது. கான்கிரீட் இடிபாடுகளில் சிக்கியிருப்பவர்களின் இதயத் துடிப்பைக் கண்டறியும் ரேடார்களை பயன்படுத்தி வருகின்றனர்.
இடிபாடுகளில் சிக்கி உள்ளவர்களை மீட்டு சிகிச்சை அளித்து வரும் இந்திய ராணுவ வீரர்கள் மற்றும் டாக்டர்களை அந்த பகுதி மக்கள் கட்டி தழுவி நன்றி தெரிவித்தனர்.
இந்த நிலையில் உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த விஜய்குமார் கவுட் என்ற நபர், துருக்கியில் பணியாற்றி வந்தார். அவர் நிலநடுக்கம் வந்த பிறகு காணாமல் போய்விட்டார். அவரது குடும்பத்தினரும் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் அவரது குடும்பத்தினர் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்