என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
எக்ஸ்பிபி1.16 வகை தொற்றால் ஆபத்து தீவிரமாக இல்லை- சுகாதார நிபுணர்கள் தகவல்
- இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் எக்ஸ்பிபி1.16 வகை பாதிப்பு முதன் முதலில் கண்டறியப்பட்டது.
- தடுப்பூசி போடப்பட்டு பாதுகாப்பாக இருப்பதால் புதிய வகை பாதிப்பு பெரிய அளவில் இருக்காது.
புதுடெல்லி:
இந்தியாவில் சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது.
இதற்கு எக்ஸ்பிபி1.16 என்ற உருமாறிய தொற்றின் எழுச்சிதான் காரணம் என கண்டறியப்பட்டுள்ளது.இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் எக்ஸ்பிபி1.16 வகை பாதிப்பு முதன் முதலில் கண்டறியப்பட்டது.
தற்போது கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில் எக்ஸ்பிபி1.16 மாறுபாட்டில் பரவல் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. எக்ஸ்பிபி1.16 வகை கொரோனா பாதிப்புகளை அதிகரிக்க செய்கிறது. ஆனால் இந்த வகை தொற்றால் ஆபத்து தீவிரமாக இல்லை என கொரோனா வைரஸ் குறித்தும் அதன் உருமாற்றம் குறித்தும் ஆய்வு செய்யும் ஆய்வுக் கூடங்களின் கூட்டமைப்பான இன்சகாக்கின் இணை தலைவர் டாக்டர் சவுமித்ரா தாஸ் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், இதை நாங்கள் முழுமையாக புரிந்து கொள்ள எங்களிடம் போதுமான தரவுகள் இல்லை. பெரும்பாலான இந்தியர்களிடம் தற்போது இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்துள்ளது.
மேலும் தடுப்பூசி போடப்பட்டு பாதுகாப்பாக இருப்பதால் புதிய வகை பாதிப்பு பெரிய அளவில் இருக்காது. ஆனால் தொற்றின் தீவிரத்தை எளிதாக கருதமுடியாது என்றார்.
இதே போல ஜெனோ மிக்ஸ் ஆராய்ச்சியாளர் டாக்டர் வினோத் ஸ்காரியா கூறுகையில், எக்ஸ்பிபி1.16 வகையால் தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் ஏற்கனவே உள்ள நோய் எதிர்ப்பு சக்திகளில் இருந்து புதிய மாறுபாடு தப்பிக்கலாம் என்றார்.
சமீபத்திய புள்ளி விபரங்களின்படி மகாராஷ்டிரா, கேரளா, குஜராத்தில் கொரோனா தினசரி பாதிப்புகள் அதிகமாக பதிவாகி வருகிறது.
இந்த 3 மாநிலங்கள் மற்றும் தெலுங்கானா, தமிழ்நாடு, கர்நாடாகவில் தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால் இம்மாநி லங்களில் பரிசோதனையை அதிகரிக்குமாறு மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.
மேலும் தொடர் கண்காணிப்பை தீவிரப்படுத்து மாறும், தொற்றால் பாதிக்கப்படுபவர்களுக்கு சிகிச்சை மற்றும் தடுப்பூசி உள்ளிட்ட கொரோனா வழிமுறைகளை பின்பற்று மாறும் சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்