என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
இமாச்சல பிரதேசத்தில் மீண்டும் வரலாறு காணாத பனிப்பொழிவு
- கரேரி, டிரையண்ட், ஆதிஹிமானி உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல அதிகாரிகள் தடை விதித்தனர்.
- மாவட்டத்தின் பல பகுதிகளில் உள்ள சிறிய மலைகளிலும் பயணிகள் யாரும் மலை ஏறும் பயிற்சியில் ஈடுபட வேண்டாம் என எச்சரிக்கப்பட்டு உள்ளனர்.
சிம்லா:
இந்தியாவில் அழகிய மலைகளும், ஏராளமான சுற்றுலா தலங்களும் அடங்கிய மாநிலம் இமாச்சல பிரதேசம்.
இந்த மாநிலத்தில் டிசம்பர் மாதம் பனிப்பொழிவு அதிகமாக இருக்கும். அதன்படி இங்குள்ள குப்ரி, மணாலி, நர்காண்டா பகுதிகளில் கடந்த சில நாட்களாக பனிப்பொழிவு அதிகமாக இருந்தது. கீலாங், ஹன்சா பகுதிகளில் 2 சென்டி மீட்டர் அளவுக்கு பனிப்பொழிவு காணப்பட்டது.
சிம்லாவின் புறநகர் பகுதியில் ஒரு சென்டி மீட்டர் அளவுக்கு பனி பெய்தது. அடுத்து வரும் நாட்களில் பனிப்பொழிவு அதிகமாக இருக்கும் என்று கூறப்பட்டது. இதனை இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
அதன்படி காங்கரா மாவட்டத்தில் நேற்று வரலாறு காணாத அளவுக்கு பனிப்பொழிவு இருந்தது. மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் பார்க்கும் இடமெல்லாம் பனி படர்ந்து காணப்பட்டது. சாலைகளிலும் பனி உறைந்து இருந்தது.
பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாத நிலை காணப்பட்டது. மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டது.
இம்மாவட்டத்தின் கரேரி, டிரையண்ட், ஆதிஹிமானி உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல அதிகாரிகள் தடை விதித்தனர்.
இதற்கிடையே இம்மாவட்டத்தில் பெய்த பனிப்பொழிவு காரணமாக பல சுரங்க பாதைகளில் சுற்றுலா வாகனங்கள் சிக்கி கொண்டன. சுமார் 400 -க்கும் மேற்பட்ட வாகனங்கள் சுரங்கங்களில் சிக்கி கொண்டன. இது பற்றிய தகவல் அறிந்த மீட்பு படையினர் அப்பகுதிக்கு சென்று வாகனங்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதுபோல மாவட்டத்தின் பல பகுதிகளில் உள்ள சிறிய மலைகளிலும் பயணிகள் யாரும் மலை ஏறும் பயிற்சியில் ஈடுபட வேண்டாம் என எச்சரிக்கப்பட்டு உள்ளனர்.
மாவட்ட நிர்வாகத்தின் முன் அனுமதி பெறாமல் யாரும் இந்த பகுதிக்கு செல்ல வேண்டாம் எனவும் அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்து உள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்