என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
கேரளாவில் 4-ந்தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு
- வங்க கடலில் சூறைக்காற்றும், அலைகளின் சீற்றமும் அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது.
- மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தி உள்ளது.
திருவனந்தபுரம்:
கேரளாவில் பல மாவட்டங்களிலும் தற்போது மழை பெய்து வருகிறது.
இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தென்மேற்கு வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதாக குறிப்பிட்டு உள்ளது.
இதன் காரணமாக வருகிற 4-ந் தேதி வரை கேரளாவின் பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மற்றும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவித்து உள்ளது.
இதுபோல வங்க கடலில் சூறைக்காற்றும், அலைகளின் சீற்றமும் அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது.
எனவே மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தி உள்ளது.
கேரள எல்லையையொட்டி அமைந்துள்ள குமரி மாவட்டத்தில் இருந்து ஏராளமான மீனவர்கள் வங்க கடலில் மீன்பிடி தொழில் செய்து வருகிறார்கள். அவர்கள் உடனடியாக கரை திரும்புமாறு வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது.
அதன்படி கேரள கடல் பகுதியில் மீன்பிடி தொழிலுக்கு சென்ற குமரி மாவட்ட மீனவர்கள் கரை திரும்பி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்