என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
இந்தியாவில் சுகாதாரமும், ஆன்மீகமும் நெருங்கிய தொடர்புடையது- பிரதமர் மோடி
- நிகழ்ச்சியில் ஹரியானா ஆளுநர் பண்டாரு தத்தாத்ரேயா, முதல்வர் மனோகர் லால் கட்டார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- சுகாதாரத் துறையில் தொழில்நுட்பம் மற்றும் நவீனமயமாக்கல் ஆகியவற்றின் கலவையானது நாட்டின் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும்.
பிரதமர் மோடி இன்று ஒரே நாளில் ஹரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் இரண்டு முக்கிய மருத்துவ கட்டமைப்புகளை தொடங்கி வைக்கிறார். அதன்படி இன்று பகல் 11 மணியளவில் ஹரியானாவின் ஃபரிதாபாத் நகரில் மாதா அமிர்தனந்தமயி நிர்வகிக்கும் அம்ரிதா பன்னோக்கு அதிநவீன சிறப்பு மருத்துவமனையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் ஹரியானா ஆளுநர் பண்டாரு தத்தாத்ரேயா, முதல்வர் மனோகர் லால் கட்டார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றியதாவது:-
இந்தியா என்பது சுகாதாரம் மற்றும் ஆன்மீகம் என இரண்டையும் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ள நாடு. கொரோனா தடுப்பூசி இயக்கம் வெற்றிகரமாக நடந்ததற்கு ஆன்மீக- தனியார் கூட்டாண்மை ஒரு எடுத்துக்காட்டு. இது விழிப்புணர்வை ஏற்படுத்தவும் உலகின் மிகப்பெரிய தடுப்பூசி இயக்கத்தை செயல்படுத்தவும் உதவியது.
தடுப்பூசி திட்டத்தின்போது, சிலர் தவறான பிம்பத்தை பரப்பினர். ஆனால் நமது ஆன்மீகத் தலைவர்கள் அதை எதிர்த்து கூறியபோது, மக்கள் முன்வந்து தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.
சுகாதாரத் துறையில் தொழில்நுட்பம் மற்றும் நவீனமயமாக்கல் ஆகியவற்றின் கலவையானது நாட்டின் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும். நிலைத்தன்மையைக் கருத்தில் கொண்டு 130 ஏக்கர் பரப்பளவில் பரந்துவிரிந்துள்ள வளாகத்தில் கட்டப்பட்ட அதிநவீன அமிர்தா மருத்துவமனை, பிரத்யேக ஏழு மாடி ஆராய்ச்சி பிரிவைக் கொண்டுள்ளது மற்றும் மாதா அமிர்தானந்தமயி மடத்தின் கீழ் ஆறு ஆண்டுகளாக கட்டப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்