search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மூணாறு அருகே விபத்து- பள்ளத்தில் அரசு பஸ் கவிழ்ந்து ஒருவர் பலி
    X

    மூணாறு அருகே விபத்து- பள்ளத்தில் அரசு பஸ் கவிழ்ந்து ஒருவர் பலி

    • பஸ் மூணாறை அடுத்த நேரியமங்கலம், சக்குறிச்சி வளைவு அருகே சென்ற போது திடீரென சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.
    • பஸ்சில் இருந்த பயணிகள் தூக்கி வீசப்பட்டனர். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து மூணாறுக்கு இன்று காலை ஒரு அரசு பஸ் சென்றது.

    பஸ்சில் ஏராளமான தொழிலாளிகள் இருந்தனர். பஸ் மூணாறை அடுத்த நேரியமங்கலம், சக்குறிச்சி வளைவு அருகே சென்ற போது திடீரென சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.

    இதில் பஸ்சில் இருந்த பயணிகள் தூக்கி வீசப்பட்டனர். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டனர்.

    இதில் அடிமாலி பகுதியை சேர்ந்த சஞ்சீவ் என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார். 20 பேர் காயம் அடைந்தனர். இதில் 5 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    பஸ்சின் டயர் வெடித்ததால் பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்திருக்கலாம் எனக்கூறப்படுகிறது.

    இது தொடர்பாக கேரள போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×