search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பஞ்சாப் சட்டசபை முன்னாள் சபாநாயகர் நிர்மல் சிங் கஹ்லோன் காலமானார்
    X

    பஞ்சாப் சட்டசபை முன்னாள் சபாநாயகர் நிர்மல் சிங் கஹ்லோன் காலமானார்

    • 2007 முதல் 2012 வரை பஞ்சாப் விதான் சபாவின் சபாநாயகராகவும் பணியாற்றினார்.
    • இவரது மறைவுக்கு சிரோமணி அகாலி தள தலைவர் சுக்பீர் சிங் பாதல் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    பஞ்சாப் சட்டசபை சபாநாயகரும், மூத்த எஸ்ஏடி தலைவருமான நிர்மல் சிங் கஹ்லோன் நீண்ட காலமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று காலை அவர் காலமானார்.

    நிர்மல் சிங்கின் மறைவை உறுதி செய்த அகாலி தளத்தின் மூத்த தலைவர் தல்ஜித் சிங் சீமா தனது டுவிட்டர் பக்கத்தில், " குர்தாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள ஃபதேகர் சூரியன் அருகே உள்ள தாதுஜோத் கிராமத்தில் கஹ்லோனின் இறுதிச் சடங்குகள் நாளை நடைபெறும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

    கஹ்லோன் 1997 முதல் 2002 வரை அகாலி அரசாங்கத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துகளுக்கான அமைச்சராக இருந்தார். அவர் 2007 முதல் 2012 வரை பஞ்சாப் விதான் சபாவின் சபாநாயகராகவும் பணியாற்றினார்.

    இந்நிலையில், இவரது மறைவுக்கு சிரோமணி அகாலி தள தலைவர் சுக்பீர் சிங் பாதல் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    மேலும் பாதல் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில், "மூத்த அகாலி தலைவரும் முன்னாள் பஞ்சாப் விதான் சபா சபாநாயகருமான நிர்மல் சிங் கஹ்லோனின் மறைவு குறித்து அறிந்து மிகவும் வருத்தமடைந்தேன். கஹ்லோன் நம் அனைவருக்கும் உத்வேகம் அளித்தவர். அவருடைய புத்திசாலித்தனமான ஆலோசனை எப்போதும் தவறவிடப்படும். இந்த நேரத்தில் கஹ்லோன் குடும்பத்திற்கு ஆதரவாக நிற்கிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார்.

    Next Story
    ×