என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
ஆந்திராவில் சிறுவனை கடத்தி ரூ.4.50 லட்சத்திற்கு விற்பனை- பெண்கள் உட்பட 5 பேர் கைது
- சிறுவன் தாமதமாக வீட்டிற்கு வந்ததால் அவரது பெற்றோர் சிறுவனிடம் விசாரித்தனர்.
- சிறுவன் தன்னுடைய நண்பர் வீட்டிற்கு சென்று தாமதமாக வந்ததாக தெரிவித்துள்ளார்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், ராஜ மகேந்திரவரம், பத்ராசலம் பகுதியை சேர்ந்தவர் 8 வயது சிறுவன்.
இவர் அங்குள்ள பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 6-ந் தேதி பள்ளிக்குச் சென்ற சிறுவன் மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரது பெற்றோர் சிறுவனை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் போலீசில் புகார் செய்தனர்.
போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுவன் பள்ளிக்குச் செல்லும் வழியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது இளம்பெண் ஒருவர் சிறுவனை அழைத்துச் செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது.
இதையடுத்து தடகுடி சென்டர் பகுதியை சேர்ந்த அன்னபூர்ணா, அவரது மகன் சாய்ராம், மகள் அனுஷா ஆகியோரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் ராஜ மகேந்திரவரதத்தை சேர்ந்த சினேகலதா-ஐசக் குன்னம் தம்பதிக்கு குழந்தை இல்லாததால் இடைத்தரகர் துளசியை அணுகி குழந்தையை கடத்தி வந்து கொடுத்தால் பணம் தருவதாக தெரிவித்தனர். இந்த தகவலை இடைத்தரகர் துளசி அன்னபூர்ணாவிடம் தெரிவித்தார்.
தினமும் அன்னபூர்ணாவின் வீட்டின் வழியாக பள்ளிக்கு சென்று வரும் சிறுவனை கடத்தி விற்க திட்டம் தீட்டினார்.
சிறுவன் பள்ளிக்கு செல்லும் போது மகள் அனுஷாவை அனுப்பி சிறுவனுக்கு அங்குள்ள கடையில் தின்பண்டங்களை வாங்கி கொடுத்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த மாதம் 27-ந் தேதி சிறுவனை ராஜ மகேந்திரபவரம் அழைத்துச் சென்று சினேகா லதாவிடம் இவன் தன்னுடைய மகன் என அறிமுகம் செய்தார். சிறுவனை ரூ.4.50 லட்சத்திற்கு விற்பனை செய்வதாக சினேகலதாவிடம் தெரிவித்தார். அவரும் ஒப்புக்கொண்டார். பின்னர் இதுகுறித்து யாரிடமும் சொல்லக்கூடாது என தெரிவித்து சிறுவனை அவரது வீட்டிற்கு அனுப்பி வைத்தார்.
சிறுவன் தாமதமாக வீட்டிற்கு வந்ததால் அவரது பெற்றோர் சிறுவனிடம் விசாரித்தனர். அப்போது சிறுவன் தன்னுடைய நண்பர் வீட்டிற்கு சென்று தாமதமாக வந்ததாக தெரிவித்துள்ளார்.
இதையடுத்து கடந்த 6-ந் தேதி சிறுவனை கடத்திச் சென்று ரூ 4.50 லட்சத்திற்கு விற்பனை செய்ததாக போலீசாரிடம் தெரிவித்தனர். போலீசார் மகேந்திரவரம் சென்று சிறுவனை மீட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.சிறுவனை விலைக்குவாங்கிய சினேகலதா, ஐசக் குன்னம் மற்றும் இடைத்தரகர் துளசி, சிறுவனை கடத்திய அன்னபூர்ணா அவரது மகள் அனுஷா ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்