என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு ஒத்திவைப்பு
- தேர்தல் ஆணையம் கட்சியின் திருத்த விதிகளை அங்கீகரிக்கவில்லை. இதனால் கட்சி செயல்படாத நிலை உருவாகியுள்ளது.
- ஆஜராக வேண்டிய மூத்த வழக்கறிஞர் இல்லாததால் விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என்று ஓபிஎஸ் தரப்பு விவாதித்தது.
அதிமுக பொதுக்குழு தொடர்பான மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது. இதில், ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தரப்பு காரசாரமாக விவாதித்தது
இதில், தேர்தல் ஆணையம் கட்சியின் திருத்த விதிகளை அங்கீகரிக்கவில்லை. இதனால் கட்சி செயல்படாத நிலை உருவாகியுள்ளது என்றும் வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என்றும் ஈபிஎஸ் தரப்பு விவாதித்தது.
மேலும், ஆஜராக வேண்டிய மூத்த வழக்கறிஞர் இல்லாததால் விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என்று ஓபிஎஸ் தரப்பு விவாதித்தது.
இந்நிலையில், இரு தரப்பு வாதங்களை கேட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள், "அனைவரும் தயாராக இருந்தால் விசாரணையை நடத்த நாங்களும் தயாராக உள்ளோம். தேர்தல் ஆணையத்துக்கு நோட்டீஸ் அளித்தீர்களா? இதற்கு என்ன தீர்வு?" என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும், பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள் அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கை வரும் 12ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்