search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஆஸ்பத்திரியில் இறந்த மனைவியின் பிணத்துடன் சென்ற கணவர் விபத்தில் பலி
    X

    ஆஸ்பத்திரியில் இறந்த மனைவியின் பிணத்துடன் சென்ற கணவர் விபத்தில் பலி

    • கடந்தா 13-ம் தேதி,பக்கத்து வீட்டாருடன் ஏற்பட்ட வாக்கு வாதத்தால் மனமுடைந்த சரண்யா, பூச்சி மருந்தை குடித்தார்.
    • ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார்.

    ஐதராபாத்:

    தெலங்கானா மாநிலம், எல்லாரம் கிராமத்தை சேர்ந்தவர் மல்லி கார்ஜுன ராவ் (31). இவரது மனைவி சரண்யா (29).

    கடந்தா 13-ம் தேதி,பக்கத்து வீட்டாருடன் ஏற்பட்ட வாக்கு வாதத்தால் மனமுடைந்த சரண்யா, பூச்சி மருந்தை குடித்தார்.

    இதையடுத்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார்.

    அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு மல்லிகார் ஜூனராவிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர், ஆம்புலன்ஸில் சரண்யாவின் உடலை ஏற்றிவிட்டு, பின்னால், பைக்கில் சென்றார்.

    அப்போது, எதிரே வந்த லாரி வேகமாக மோதியது. இந்த விபத்தில் மல்லிகார்ஜுன ராவ் சம்பவ இடத்திலேயே பலியானார். தாயும், தந்தையும் இறந்ததால் இவர்களின் 2 பிள்ளைகளும் கதறி அழுதனர். இது அனைவரின் மனதையும் கலங்கச் செய்தது.

    Next Story
    ×