search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஜம்மு காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
    X

    ஜம்மு காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

    • பதுங்கியுள்ள பயங்கரவாதிகளை தேடுதல் பணி நடந்து வருகிறது.
    • கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இருவரும் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ்-இ-முகமது உடன் தொடர்புடையவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஜம்மு காஷ்மீரில் உள்ள பாரமுல்லாவில் பாதுகாப்பு படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

    பாரமுல்லா பகுதியில் இன்று அதிகாலை பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே என்கவுன்டர் நடந்தது. இதில், தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ்-இ-முகமது உடன் தொடர்புடைய இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக காஷ்மீர் கூடுதல் காவல்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

    மேலும், பதுங்கியுள்ள பயங்கரவாதிகளை தேடும் பணி நடந்து வருவதாகவும், இதுதொடர்பான விவரங்கள் அறிவிக்கப்படும் என்றும் காஷ்மீர் கூடுதல் காவல்துறை இயக்குனர் அறிவித்துள்ளார்.

    Next Story
    ×