என் மலர்

    இந்தியா

    நாடு முழுவதும் புதிதாக 19,406 பேருக்கு கொரோனா தொற்று
    X

    நாடு முழுவதும் புதிதாக 19,406 பேருக்கு கொரோனா தொற்று

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 19,928 பேர் குணமடைந்துள்ளனர்.
    • இதுவரை குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 34 லட்சத்து 65 ஆயிரத்து 552 ஆக உயர்ந்தது.

    புதுடெல்லி:

    இந்தியாவில் புதிதாக 19,406 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில் கூறி உள்ளது.

    நேற்றுமுன்தினம் பாதிப்பு 19,893 ஆகவும், நேற்று 20,551 ஆகவும் இருந்த நிலையில் இன்று சற்று குறைந்துள்ளது. நாட்டின் மொத்த பாதிப்பு 4 கோடியே 41 லட்சத்து 26 ஆயிரத்து 994 ஆக உயர்ந்தது.

    டெல்லியில் சுமார் 6 மாதங்களுக்கு பிறகு தினசரி பாதிப்பு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு 2 ஆயிரத்தை தாண்டியது. நேற்று முன்தினம் 2,202 ஆக உயர்ந்தது. இந்நிலையில் நேற்று 2,419 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 19,928 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 34 லட்சத்து 65 ஆயிரத்து 552 ஆக உயர்ந்தது.

    தற்போது 1,34,793 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது நேற்றை விட 571 குறைவு ஆகும். தொற்று பாதிப்பால் மேலும் 49 பேர் இறந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 5,26,649 ஆக உயர்ந்தது.

    Next Story
    ×