search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கேரளாவில் தெரு நாய்கள் தொல்லைக்கு தீர்வு காண உச்சநீதிமன்றம் உத்தரவு
    X

    கேரளாவில் தெரு நாய்கள் தொல்லைக்கு தீர்வு காண உச்சநீதிமன்றம் உத்தரவு

    • கோழிக்கோட்டில் தெரு நாய்கள் தொல்லை காரணமாக 6 பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.
    • மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் கண்ணூர், கோழிக்கோடு உள்ளிட்ட மாவட்டங்களில் தெரு நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. கடந்த ஒருவார காலத்தில் தெருநாய்கள் கடித்து பலர் காயமடைந்துள்ளனர். கோழிக்கோட்டில் தெரு நாய்கள் தொல்லை காரணமாக 6 பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.

    இந்நிலையில் தெருநாய்கள் தொல்லையை தடுக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி கேரள மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தது. அதனை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு கேரளாவில் தெரு நாய் தொல்லைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என உத்தரவிட்டது.

    Next Story
    ×