என் மலர்tooltip icon

    இந்தியா

    ஏக்நாத் ஷிண்டேவை கிண்டல் செய்வதா? மும்பை ஓட்டலை சூறையாடிய சிவசேனா கட்சியினர்
    X

    ஏக்நாத் ஷிண்டேவை கிண்டல் செய்வதா? மும்பை ஓட்டலை சூறையாடிய சிவசேனா கட்சியினர்

    • கைது செய்ய கிருஷ்ணா ஹெக்டே வலியுறுத்தி உள்ளார்.
    • காவல் துறை தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவை துரோகி என்று குறிப்பிட்ட காமெடி நடிகர் குணால் கம்ரா சர்ச்சையில் சிக்கியுள்ளார். சர்ச்சை கருத்து தெரிவித்த காமெடி நடிகர் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் என்று அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் கிருஷ்ணா ஹெக்டே வலியுறுத்தி உள்ளார்.

    மேலும், காமெடி நடிகருக்கு சிவசேனா டிரீட்மென்ட் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், "குணால் கம்ராவின் கருத்துக்கள் மிக மோசமாக உள்ளன. அவர் விமானங்களில் பயணிக்க தடை விதிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது காவல் துறை தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்று குறிப்பிட்டுள்ளார்.

    முன்னதாக காமெடி நடிகர் குணால் கம்ராவின் நிகழ்ச்சி படமாக்கப்பட்ட மும்பையின் கர் பகுதியில் உள்ள யூனிகான்டினென்ட்டர் ஓட்டல் மீது சிவசேனா கட்சியினர் தாக்குதல் நடத்தினர்.

    இந்த விவகாரம் குறித்து சிவேசான எம்.பி. நரேஷ் மஹாஸ்கே கூறும் போது, "இந்தியாவை விட்டு வெளியேற கட்டாயப்படுத்தப்படுவாய்," என்று தெரிவித்தார்.

    Next Story
    ×