என் மலர்
இந்தியா

விண்ணில் ஏவப்பட்டது PSLV-C61 ராக்கெட்
- பூமி கண்காணிப்புக்காக இ.ஒ.எஸ்-09 என்ற செயற்கைக்கோள் வடிவமைக்கப்பட்டது.
- இதன் ஆயுட்காலம் 5 ஆண்டு மட்டுமே ஆகும் என இஸ்ரோ தெரிவித்தது.
ஸ்ரீஹரிகோட்டா:
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள முதலாவது ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-61 என்ற ராக்கெட் இன்று காலை 5.59 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது. ராக்கெட்டுக்கு தேவையான திட மற்றும் திரவ எரிபொருள் நிரப்பப்பட்டு உள்ளது.
பூமி கண்காணிப்புக்காக 1,696.24 கிலோ எடை கொண்ட இ.ஒ.எஸ்-09 என்ற செயற்கைக்கோளை இஸ்ரோ வடிவமைத்துள்ளது. இதன் ஆயுட்காலம் 5 ஆண்டு ஆகும்.
இந்நிலையில், பி.எஸ்.எல்.வி. சி-61 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது என்றும், ராக்கெட் மற்றும் செயற்கைக் கோள் செயல்பாடுகளை விஞ்ஞானிகள் கண்காணித்து வருகின்றனர் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.
இது இஸ்ரோவின் 101-வது ராக்கெட் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story






