search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கர்நாடகா சட்டமன்றத்தில் பா.ஜனதா எம்.எல்.ஏ.-க்கள் கடும் அமளியில் ஈடுபட்டதால் பரபரப்பு
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    கர்நாடகா சட்டமன்றத்தில் பா.ஜனதா எம்.எல்.ஏ.-க்கள் கடும் அமளியில் ஈடுபட்டதால் பரபரப்பு

    • மாநிலங்களவை தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட போது பாகிஸ்தானுக்கு ஆதரவாக குரல்.
    • குரல் எழுப்பியவர்களை கைது செய்ய வேண்டும் என பா.ஜனதா வலியுறுத்தல்.

    கர்நாடகா மாநிலத்தில் நான்கு மாநிலங்களவை இடம் காலியாக உள்ளது. நான்கு இடத்திற்கு காங்கிரஸ் தரப்பில் மூன்று பேரும், பா.ஜனதா- மதசார்பற்ற ஐக்கிய தளம் சார்பில் இருவரும் போட்டியிட்டதால் தேர்தல் நடத்தப்பட்டது.

    காங்கிரஸ் தரப்பில் நிறுத்தப்பட்ட மூன்று வேட்பாளர்களும் வெற்றி பெற்றனர். அவர்களில் ஒருவர் சயீத் நசீர் ஹுசைன். இவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதும் சட்டமன்ற வளாகத்தில் அவர்களுடைய ஆதரவாளர்கள் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என கோஷம் எழுப்பியதாக பா.ஜனதாவினர் குற்றஞ்சாட்டினர்.

    மேலும், இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்தனர். மேலும், கோஷம் எழுப்பியதற்கான ஆடியோ ஆதாரத்தையும் வழங்கினர்.

    இந்த நிலையில் இன்று காலை கர்நாடகா சட்டமன்ற கூட்டம் தொடங்கியது. கூட்டம் தொடங்கியதும் பாகிஸ்தானுக்கு ஆதரவாக குரல் எழுப்பியவர்களை கைது செய்ய வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் ஆர். அசோகா உள்ளிட்ட பா.ஜனதா எம்.எல்.ஏ.-க்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.

    உடனடியாக முதல்வர் சித்தராமையா எழுந்து "நான் உங்களிடம் ஏற்கனவே தெரிவித்துள்ளேன். அரசு நடவடிக்கை எடுப்பதில் உறுதியாக உள்ளது. ரிப்போர்ட் வந்த பிறகு நாங்கள் யாரையும் விடமாட்டோம். தடய அறிவியல் ஆய்வகத்திற்கு ஆடியோ அனுப்பப்பட்டுள்ளது. அதன் ரிப்போர்ட் கிடைத்தபின், நடவடிக்கை எடுப்போம்" என்றார்.

    Next Story
    ×