என் மலர்tooltip icon

    இந்தியா

    ஜனாதிபதி திரவுபதி முர்மு விநாயகர் சதுர்த்தி வாழ்த்து
    X

    ஜனாதிபதி திரவுபதி முர்மு விநாயகர் சதுர்த்தி வாழ்த்து

    • ஞானம் மற்றும் நல்வாழ்வின் மூலமாக கணேச பகவான் வணங்கப்படுகிறார்.
    • தூய்மையான, பசுமையான மற்றும் வளமான தேசத்தை கட்டியெழுப்புவதற்கு பங்களிப்போம்.

    விநாயகர் சதுர்த்தியையொட்டி ஜனாதிபதி திரவுபதி முர்மு வெளியிட்ட வாழ்த்துச்செய்தி கூறியிருப்பதாவது:-

    விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் உள்ள ஒவ்வொரு இந்தியருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். ஞானம் மற்றும் நல்வாழ்வின் மூலமாக கணேச பகவான் வணங்கப்படுகிறார்.

    புதிய தொடக்கங்களுக்கும், தடைகளை நீக்குவதற்கும் நாம் அவருடைய ஆசீர்வாதங்களை பெறுகிறோம். நமது சுற்றுச்சூழலை பாதுகாத்து, இந்த பண்டிகையை கொண்டாடுவோம். தூய்மையான, பசுமையான மற்றும் வளமான தேசத்தை கட்டியெழுப்புவதற்கு பங்களிப்போம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×