search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பொங்கல் விழா: வைக்கோல் தீயில் பாய்ந்து ஓடிய 100-க்கும் மேற்பட்ட மாடுகள்
    X

    வைக்கோலில் தீ பற்றவைத்து மாடுகளை ஓடவிட்ட காட்சி.

    பொங்கல் விழா: வைக்கோல் தீயில் பாய்ந்து ஓடிய 100-க்கும் மேற்பட்ட மாடுகள்

    • பொங்கல் விழாவை பொங்கல் வைத்து சிறப்பாக கொண்டாடி, இரவு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடந்தன.
    • கர்நாடக மாநிலத்தில் உள்ள கிராமப்புறங்களில் காலங்காலமாக செய்யப்படும் சம்பிரதாயம் ஆகும்.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலத்தில் பொங்கல் திருநாள் மகர சங்கராந்தி என அழைக்கப்படுகிறது. இதையொட்டி மாநிலம் முழுவதும் பொங்கல் வைத்து சிறப்பாக கொண்டாடப்பட்டது.

    இந்த நிலையில் நகர்ப்புறங்களை காட்டிலும் கிராமப்புறங்களில் மாடு வளர்ப்பவர்கள் மாட்டுப்பொங்கல் அன்று விசேஷமாக மாடுகளை கவுரவிக்கும் வகையில் பூஜை செய்து, மாலை அணிவித்து, சிறப்பு வழிபாடுகளும் நடத்தப்படுகிறது.

    இந்த நிலையில் கிராமத்து பொங்கலை நகருக்குள் கொண்டு வர வேண்டும் என்று விரும்பிய பெங்களூரு நகரின் மகாலட்சுமி லேஅவுட் அருகே உள்ள நந்தினி படாவனே பகுதியை சேர்ந்த தன்னார்வ அமைப்பினர் மகர சங்கராந்தி என்று அழைக்கப்படும் பொங்கல் விழாவை பொங்கல் வைத்து சிறப்பாக கொண்டாடி, இரவு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடந்தன.

    இறுதியில் கிராமப்புறங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட 100-க்கும் மேற்பட்ட மாடுகளை வரவழைத்து இருந்தனர்.

    அந்த மாடுகளை சாலையின் குறுக்கே வைக்கோல் புல் போட்டு, வைக்கோல் புல் பற்றவைக்கப்பட்டு, தீயில் வரிசையாக ஒவ்வொரு மாடுகளாக ஓட வைத்தனர்.

    இது கர்நாடக மாநிலத்தில் உள்ள கிராமப்புறங்களில் காலங்காலமாக செய்யப்படும் சம்பிரதாயம் ஆகும். இதனை நகருக்குள் கொண்டுவர வேண்டும் என்று விரும்பிய இந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் 100-க்கும் அதிகமான மாடுகளை வரவழைத்து அந்த மாடுகளை தீயில் ஓட வைத்து கொண்டாடியது இந்த பகுதி மக்களை ஆச்சரியப்பட வைத்தது.

    இதில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை, வியப்புடன், ஆச்சரியதுடன் கண்டு ரசித்தனர்.

    Next Story
    ×