search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஸ்பெயின் அதிபர் விரைவில் குணமடைய பிரதமர் மோடி வாழ்த்து
    X

    ஸ்பெயின் அதிபர் விரைவில் குணமடைய பிரதமர் மோடி வாழ்த்து

    • டெல்லியில் நடைபெறும் ஜி-20 மாநாட்டில் ஸ்பெயின் அதிபர் பங்கேற்க போவதில்லை என அறிவித்துள்ளார்.
    • ரஷிய அதிபர் புதின், சீன அதிபர் ஜின்பிங் ஆகியோர் ஜி-20 மாநாட்டில் பங்கேற்க மாட்டார்கள்.

    புதுடெல்லி:

    ஸ்பெயின் நாட்டின் அதிபர் பெட்ரோ சான்செசும் ஜி-20 மாநாட்டில் கலந்துகொள்ள இருந்தார். இதற்காக அவர் நேற்று இரவு இந்தியா வர திட்டமிட்டிருந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதன் காரணமாக அவர் டெல்லியில் நடைபெறும் ஜி-20 மாநாட்டில் பங்கேற்கபோவதில்லை என அறிவித்துள்ளார்.

    ஏற்கனவே ரஷிய அதிபர் புதின், சீன அதிபர் ஜின்பிங் ஆகியோர் ஜி-20 மாநாட்டில் பங்கேற்க மாட்டார்கள் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது ஸ்பெயின் அதிபர் பெட்ரோ சான்செஸ் கொரோனா தொற்று காரணமாக ஜி-20 மாநாட்டில் பங்கேற்பதை தவிர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதனிடையே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள ஸ்பெயின் அதிபர் பெட்ரோ சான்செஸ் விரைவில் குணமடைய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×