என் மலர்tooltip icon

    இந்தியா

    மிச்சாங் புயலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்துக்கு பிரதமர் மோடி இரங்கல்
    X

    மிச்சாங் புயலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்துக்கு பிரதமர் மோடி இரங்கல்

    • மிச்சாங் புயலில் சிக்கி சென்னையில் 17 பேர் உயிரிழந்தனர்.
    • மிச்சாங் புயலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்தார்.

    புதுடெல்லி:

    மிச்சாங் புயல் எதிரொலியால் சென்னையில் கடந்த இரு தினங்களாக மழை வெளுத்து வாங்கியது. இதனால் பல்வேறு இடங்களில் மழை நீர் சூழ்ந்தது.

    சென்னையில் கனமழையால் மழைநீரில் மூழ்கி, மரங்கள் மற்றும் சுவர்கள் விழுந்து என வெவ்வேறு நிகழ்வுகளில் இதுவரை 17 பேர் உயிரிழந்துள்ளனர் என சென்னை பெருநகர காவல்துறை தெரிவித்தது.

    இந்நிலையில், மிச்சாங் புயலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், மிச்சாங் சூறாவளியால் தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் புதுச்சேரியில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள். புயலால்பாதிப்பு அடைந்தவர்களுடன் எனது பிரார்த்தனைகள் உள்ளன. பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிகாரிகள் அயராது உதவிவருகின்றனர். நிலைமை முழுமையாக சீராகும் வரை தங்கள் பணியை அவர்கள் தொடர்வார்கள் என பதிவிட்டுள்ளார்

    Next Story
    ×