search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    புலம்பெயர் இந்தியர்கள் மாநாடு - பிரதமர் மோடி கயானா, சுரினாம் அதிபர்களுடன் சந்திப்பு
    X

    இருநாட்டு அதிபர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு

    புலம்பெயர் இந்தியர்கள் மாநாடு - பிரதமர் மோடி கயானா, சுரினாம் அதிபர்களுடன் சந்திப்பு

    • மத்தியபிரதேசத்தின் இந்தூரில் புலம்பெயர்ந்த இந்தியர்கள் மாநாடு தொடங்கியது
    • இந்த மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

    இந்தூர்:

    மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் புலம்பெயர்ந்த இந்தியர்கள் மாநாடு தொடங்கியது. மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். சூரிநாம் நாட்டு அதிபர் சந்திரிகாபிரசாத் சந்தோகி சிறப்பு விருந்தினராகவும், கயானா நாட்டு அதிபர் முகமது இர்பான் அலி தலைமை விருந்தினராகவும் பங்கேற்றனர்.

    இந்த மாநாட்டுக்கு வந்துள்ள சுரிநாம் அதிபர் சந்திரிகாபிரசாத் சந்தோகி, கயானா அதிபர் முகமது இம்ரான் அலி ஆகியோருடன் பிரதமர் மோடி தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்தினார்.

    சந்தோகியுடனான பேச்சுவார்த்தையின்போது பரஸ்பர நலன்சார்ந்த ஹைட்ரோகார்பன், பாதுகாப்பு, கடல்சார் பாதுகாப்பு, மின்னணு தொழில்நுட்பம், திறன் கட்டமைப்பு ஆகிய துறைகளில் ஒத்துழைப்பு குறித்து ஆலோசித்தார். சுரிநாம் நாட்டின் கடன்களை மறுசீரமைத்ததற்காக இந்தியாவுக்கு சந்தோகி பாராட்டு தெரிவித்தார்.

    இதேபோல், கயானா அதிபருடனான பேச்சுவார்த்தையின்போது எரிசக்தி, உள்கட்டமைப்பு மேம்பாடு, மருந்தியல் பொருட்கள், ஆரோக்கியம், தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் ஒத்துழைப்பது குறித்து பிரதமர் மோடி விவாதித்தார். இருநாட்டு மக்களிடையிலான 180 ஆண்டுகால நட்புறவை மேலும் வலுப்படுத்த இருவரும் ஒப்புக்கொண்டனர்.

    Next Story
    ×