search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் பிஷன் சிங் பேடி மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்
    X

    இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் பிஷன் சிங் பேடி மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

    • அசாத்திய பந்துவீச்சால் இந்திய அணி ஏராளமான போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.
    • எதிர்கால கிரிக்கெட் வீரர்களுக்கு பிஷன் சிங் பேடி எடுத்துக்காட்டாக திகழ்வார்.

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் பிஷன் சிங் பேடி உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்து உள்ளார்.

    இது தொடர்பான எக்ஸ் பதிவில், "ஸ்ரீ பிஷன் சிங் பேடி உயிரிழந்தார் என்ற செய்தி அறிந்து கவலையுற்றேன். விளையாட்டின் மீது அவர் கொண்டிருந்த காதல், அவரது அசாத்திய பந்துவீச்சால் இந்திய அணி ஏராளமான போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. அவர் தொடர்ந்து எதிர்கால கிரிக்கெட் வீரர்களுக்கு எடுத்துக்காட்டாக திகழ்வார். அவரது குடும்பத்தார், நண்பர்களுக்கு இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்," என்று குறிப்பிட்டுள்ளார்.

    இடதுகை சுழற் பந்துவீச்சாளரான பிஷன் சிங் பேடி 1967 முதல் 1979 வரையிலான காலக்கட்டத்தில் இந்திய அணிக்காக விளையாடி இருக்கிறார். இதில் 22 போட்டிகளில் அவர் இந்திய அணியின் கேப்டனாகவும் செயல்பட்டு இருக்கிறார்.

    67 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருக்கும் பிஷன் சிங் 266 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். பத்து ஒருநாள் போட்டிகளில் விளையாடி இருக்கும் இவர் ஏழு விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். பிஷன் சிங் பேடிக்கு மத்திய அரசு கடந்த 1970-ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது.

    Next Story
    ×