search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    டெல்லியில் காற்று மாசை குறைக்க செயற்கை மழைக்கு திட்டம்
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    டெல்லியில் காற்று மாசை குறைக்க செயற்கை மழைக்கு திட்டம்

    • ஐ.ஐ.டி. குழுவிடம் விரிவான திட்டத்தை டெல்லி அரசு கேட்டுள்ளது.
    • செயற்கை மழையை உருவாக்க குறைந்த பட்சம் 40 சதவீத மேக மூட்டம் அவசியம் என்று ஐ.ஐ.டி. குழுவினர் தெரிவித்துள்ளனர்.

    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியில் காற்று மாசு கடுமையாக இருந்து வருகிறது. காற்றின் தரக்குறியீடு 480-க்கு மேல் சென்றது. இன்று காலை டெல்லியில் ஒட்டு மொத்த காற்றின் தரக் குறியீடு 421-ஆக இருந்தது.

    இது கடுமையான பிரிவில் உள்ளது. இதனால் மக்கள் கடும் அவதியடைந்துள்ளனர். காற்று மாசை குறைக்க மாநில அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில் காற்று மாசை குறைக்க செயற்கை மழையை பெய்ய வைக்க திட்டமிட்டுள்ளது.

    இது தொடர்பாக டெல்லி மாநில சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால்ராய், நிதி மந்திரி அதிஷி ஆகியோர் ஐ.ஐ.டி. கான்பூர் குழுவுடன் ஆலோசனை கூட்டத்தை நடத்தினர். இதில் டெல்லியில் காற்று மாசை குறைக்க கிளவுட் சீடிங் மூலம் செயற்கை மழையை பெய்ய வைப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.

    தற்போது ஐ.ஐ.டி. குழுவிடம் விரிவான திட்டத்தை டெல்லி அரசு கேட்டுள்ளது. டெல்லியில் காற்று மாசை குறைக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு விசாரணையில் இந்த திட்டம் பற்றி டெல்லி அரசு சமர்பிக்க உள்ளது. கோர்ட்டு அனுமதி அளித்தால் டெல்லி, மத்திய அரசும் செயற்கை மழை திட்டத்தை செயல்படுத்தும். செயற்கை மழையை உருவாக்க குறைந்த பட்சம் 40 சதவீத மேக மூட்டம் அவசியம் என்று ஐ.ஐ.டி. குழுவினர் தெரிவித்துள்ளனர்.

    மேக மூட்டம் வருகிற 20, 21-ந் தேதிகளில் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே அன்று செயற்கை மழையை பெய்ய வைக்கலாம் என்று அமைச்சர் கோபால் ராய் தெரிவித்தார்.

    Next Story
    ×