என் மலர்
இந்தியா

வீட்டின் மீது மோதிய கிளைடர் விமானம்: விமானி-பயணி காயம்
- புறப்பட்ட இடத்தில் இருந்து 500 மீட்டர் தொலைவில் இந்த விபத்து ஏற்பட்டது.
- விமானம் மோதியபோது வீட்டில் இருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக தப்பினார்கள்.
பாட்னா:
ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் மாவட்டத்தில் கிளைடர் விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் ஒரு வீட்டில் மோதியது. இந்த விபத்தில் விமானி மற்றும் ஒரு பயணி காயம் அடைந்தனர்.
விமானம் புறப்பட்ட இடத்தில் இருந்து 500 மீட்டர் தொலைவில் இந்த விபத்து ஏற்பட்டது. இது நகரை சுற்றிப் பார்க்க பயன்படும் விமானம் என்பதால் அதில் விமானியும், ஒரு பயணியும் மட்டுமே அனுமதிக்கப்பட்டி ருந்தனர்.
விமானம் மோதியபோது வீட்டில் இருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக தப்பினார்கள்.
Next Story






