search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    நன்றாக வேலை செய்யும் நபருக்கு மரியாதை கிடைக்காது: நிதின் கட்கரி
    X

    நன்றாக வேலை செய்யும் நபருக்கு மரியாதை கிடைக்காது: நிதின் கட்கரி

    • தங்களுடைய சித்தாந்தத்தின் அடிப்படையில் உறுதியாக இருக்கும் மக்கள் இருக்கிறார்கள்.
    • ஆனால், அதுபோன்று இருக்கும் நபர்கள் எண்ணிக்கை குறைந்து கொண்டு வருகிறது.

    மும்பையில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அவர்களுடைய முன்மாதிரியான பங்களிப்பிற்காக விருது வழங்கும் விழா லோக்மாத் மீடியா குழுவினரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த விழாவில் மத்திய அமைச்சர் நிதிக் கட்கரி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    எந்த கட்சியின் ஆட்சியாக இருந்தாலும் நன்றாக வேலை செய்யும் நபருக்கு ஒருபோதும் மரியாதை கிடைக்காது. அதேபோல் மோசமாக வேலை செய்யும் நபர் ஒருபோதும் தண்டிக்கப்படமாட்டார் (யாருடைய பெயரையும் குறிப்பிடவில்லை). எப்போதும் நகைச்சுவைக்காக இதை நான் கூறுவதுண்டு.

    நம்முடைய விவாதம், ஆலோசனை, மாறுபட்ட கருத்துகள் பிரச்சினை இல்லை. நம்முடைய பிரச்சினை ஐடியா குறைபாடுதான்.

    தங்களுடைய சித்தாந்தத்தின் அடிப்படையில் உறுதியாக இருக்கும் மக்கள் இருக்கிறார்கள். ஆனால், அதுபோன்று இருக்கும் நபர்கள் எண்ணிக்கை குறைந்து கொண்டு வருகிறது. இப்படி நடைபெற்று வருவது, ஜனநாயகத்திற்கு நல்லதல்ல.

    பிரபலம் மற்றும் புகழ் அவசியம்தான். ஆனால், பாராளுமன்றத்தில் அவர்கள் என்ன பேசினார்கள் என்பதை விட, அவர்களுடைய தொகுதி மக்களுக்கு அவர்கள் எப்படி பணியாற்றினார்கள் என்பது முக்கியமானது.

    நீண்ட காலத்திற்குப் பிறகு நமது ஜனநாயகம் மிகவும் வலுப்பெறப் போகிறது என்பதை இன்று உணர்கிறேன். நாடாளுமன்றத்தின் கண்ணியத்தையும் மரியாதையையும் உயர்த்த வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது.

    இவ்வாறு நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

    லாலு பிரசாத்தின் பேச்சுத்திறமையை வெகுவாக பாராட்டிய அவர், முன்னாள் பாதுகாப்பு மந்திரி ஜார்ஜ் பெர்னாண்டஸிடம் இருந்து நடத்தை, எளிமை, ஆளுமை ஆகியவை குறித்து அதிக அளவில் கற்றுக் கொண்டேன். வாஜ்பாய்க்கு பிறகு தன்னை மிகவும் கவர்ந்தவர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் எனத் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×