search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    எங்கும் போகமாட்டேன்: பெண் தொண்டர்களுக்கு ஆறுதல் கூறிய முன்னாள் முதல் மந்திரி
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    எங்கும் போகமாட்டேன்: பெண் தொண்டர்களுக்கு ஆறுதல் கூறிய முன்னாள் முதல் மந்திரி

    • மத்திய பிரதேசத்தில் பா.ஜ.க. 163 இடங்களில் வெற்றி பெற்றது.
    • மோகன் யாதவ் முதல் மந்திரியாக தேர்வு செய்யப்பட்டார்.

    போபால்:

    மத்திய பிரதேசத்தில் தொடர்ச்சியாக ஆட்சியில் இருந்து வரும் பா.ஜனதா இந்த தடவை அதிக இடங்களை கைப்பற்றி இருக்கிறது.

    அங்கு மோகன் யாதவ் புதிய முதல் மந்திரியாக பொறுப்பேற்றுக் கொண்டார். ராஜேந்திர சுக்லா, ஜெகதீஷ் தேவ்தா இருவரும் துணை முதல்-மந்திரிகளாக பதவியேற்றனர்.

    இந்நிலையில், விதிஷா தொகுதியில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.வும், முன்னாள் முதல் மந்திரியுமான சிவராஜ் சிங் சவுகான் அங்கு நடந்த நலத்திட்ட நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

    அங்கிருந்த பெண் தொண்டர்கள் பலர் முதல் மந்திரி பதவி மாற்றப்பட்டதால் வருந்தி கண்ணீர் விட்டுக் கதறினர். அப்போது பேசிய சிவராஜ் சிங் சவுகான், நாங் இங்கிருந்து எங்கும் போகமாட்டேன், உங்களோடு தான் இருப்பேன் என அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

    Next Story
    ×