என் மலர்tooltip icon

    இந்தியா

    மும்பை தாக்குதல் குற்றவாளி ராணாவை பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தது என்.ஐ.ஏ.
    X

    மும்பை தாக்குதல் குற்றவாளி ராணாவை பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தது என்.ஐ.ஏ.

    • அமெரிக்காவில் இருந்த நாடு கடத்தப்பட்ட ராணா இன்று மாலை டெல்லி விமான நிலையம் கொண்டு வரப்பட்டார்.
    • என்.ஐ.ஏ. அவரை பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் முறையாக கைது செய்துள்ளது.

    மும்பை தொடர் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட தஹாவூர் ராணா அமெரிக்காவில் கைது செய்யப்பட்டார். அவர் இந்தியாவுக்கு கொண்டு வர மத்திய அரசு தீவிர முயற்சி மேற்கொண்டது. இதன் பயனாக இன்று இந்தியா கொண்டு வரப்பட்டார்.

    ராணா டெல்லி வந்தடைந்ததும் என்.ஐ.ஏ. முறையாக அவரை கைது செய்தனர். பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின்கீழ் அவரை என்.ஐ.ஏ. கைது செய்துள்ளது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து என்.ஐ.ஏ. குழு, தேசிய பாதுகாப்பு குழு, மூத்த அதிகாரிகள் கொண்ட குழு ஆகியவை சிறப்ப விமானம் ராணவை இந்தியாவுக்கு கொண்டு வந்தனர்.

    ராணாவுக்காக டெல்லி சட்ட சேவைகள் ஆணையத்தில் இருந்து வழக்கறிஞர் பியூஷ் சச்தேவா ஆஜராகிறார். சிறப்பு அரசு வழக்கறிஞர் நரேந்திர மான், மூத்த வழக்கறிஞர் தயான் கிருஷ்ணன் அரசு சார்பில் ஆஜராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    Next Story
    ×