search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கோவாவில் தங்கியிருந்த தனது மகளை காணவில்லை என நேபாள மேயர் புகார்
    X

    கோவாவில் தங்கியிருந்த தனது மகளை காணவில்லை என நேபாள மேயர் புகார்

    • நேபாள மேயர் கோவாவில் உள்ள ஓஷோ தியான மையத்துடன் இணைந்து தியான பயிற்சி மேற்கொண்டிருந்தார்
    • கோவாவில் வசிப்பவர்கள் தனது மகளை கண்டுபிடிப்பதற்கு உதவ வேண்டும் என்று நேபாள மேயர் கோரிக்கை

    கோவாவில் தங்கி இருந்த தனது மகளை காணவில்லை என்று நேபாளத்தின் தங்காதி துணை பெருநகரத்தின் மேயர் கோபால் ஹமால் தெரிவித்துள்ளார்.

    36 வயதான ஆர்த்தி ஹமால் கோவாவில் உள்ள ஓஷோ தியான மையத்துடன் இணைந்து சில மாதங்களாக தியான பயிற்சி மேற்கொண்டிருந்தார்.

    இந்நிலையில், மார்ச் 25 இரவு 9.30 மணியளவில் அஷ்வெம் பாலத்தின் அருகே இருந்த ஆரத்தி, அதற்கு பின் காணவில்லை என அவரது தோழி, கோபால் குடும்பத்தினருக்கு தெரிவித்துள்ளார்.

    கோவாவில் வசிப்பவர்கள் தனது மகளை கண்டுபிடிப்பதற்கு உதவ வேண்டும் என்று நேபாள மேயர் கோபால் ஹமால், சமூக வலைத்தளங்களில் உதவி கோரியுள்ளார்.

    இது தொடர்பாக வழக்கு பதிந்துள்ள கோவா காவல்துறை, ஆர்த்தியை தேடி வருவதாக தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×