search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    வெடிவிபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதி: மகாராஷ்டிரா அரசு அறிவிப்பு
    X

    வெடிவிபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதி: மகாராஷ்டிரா அரசு அறிவிப்பு

    • மகாராஷ்டிரா வெடி விபத்தில் சிக்கி 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
    • வெடிவிபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மும்பை:

    மகாராஷ்டி மாநிலம் நாக்பூரில் வெடிபொருட்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. சோலார் இன்டஸ்டிரீஸ் என்னும் தொழிற்சாலையில் விபத்து நடந்துள்ளது. பேக்கிங் செய்யும் போது வெடி விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இந்த வெடி விபத்தில் சிக்கி 9 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியானது. வெடிவிபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், நாக்பூர் வெடிவிபத்தில் சிக்கி பலியானோர் குடும்பத்தினருக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

    இதுதொடர்பாக, துணை முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறுகையில், விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல் மந்திரி நிதியுதவி அறிவித்துள்ளார். விரைவில் விபத்து நடைபெற்ற இடத்தைப் பார்வையிட உள்ளேன் என தெரிவித்தார்.

    Next Story
    ×