search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஜப்பான் பிரதமருக்கு புத்தர் சிலையை பரிசளித்த பிரதமர் மோடி
    X

    புத்தர் சிலை

    ஜப்பான் பிரதமருக்கு புத்தர் சிலையை பரிசளித்த பிரதமர் மோடி

    • ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
    • பிரதமர் மோடி அவருக்கு சந்தன மர புத்தர் சிலையை பரிசாக வழங்கினார்.

    புதுடெல்லி:

    ஜப்பானின் மேற்கு நகரமான ஹிரோஷிமாவில் வரும் மே மாதம் ஜி7 உச்சி மாநாடு நடைபெறுகிறது.

    இந்நிலையில், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா அரசுமுறை பயணமாக நேற்று இந்தியா வந்தடைந்தார். டெல்லி விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன்பின், டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் ஜப்பான் பிரதமர் கிஷிடா மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

    தலைநகர் டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடி, ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடாவை சந்தித்தார். இதையடுத்து இரு தலைவர்களுக்கும் இடையே இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது.

    அப்போது ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடாவுக்கு கர்நாடக கலையைப் போற்றும் விதமாக மரப்பெட்டியில் சந்தன மர புத்தர் சிலையை வைத்து அதனை பிரதமர் மோடி பரிசாக வழங்கினார்.

    Next Story
    ×