என் மலர்tooltip icon

    இந்தியா

    தெலுங்கானாவில் அதிசய சம்பவம் ஒரே முட்டையில் 2 கோழி குஞ்சுகள்
    X

    தெலுங்கானாவில் அதிசய சம்பவம் ஒரே முட்டையில் 2 கோழி குஞ்சுகள்

    • அதிசய சம்பவம் ஊர் முழுவதும் பரவியது.
    • ஏராளமான மக்கள் அதிசய கோழிக்குஞ்சுகளை பார்த்து செல்கின்றனர்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம், அடிலாபாத் மாவட்டம், போத் மண்டலத்தை சேர்ந்தவர் ஷேக் தவ்பிக். இவர் வீட்டில் ஏராளமான கோழிகளை வளர்த்து வருகிறார்.

    இதில் ஒரு கோழி முட்டைகளை அடைகாத்து வந்தது. அடைகாக்கப்பட்ட ஒரு முட்டையில் இருந்து நேற்று 2 கோழிக்குஞ்சுகள் வந்தது. 2 கோழிக்குஞ்சுகளும் தற்போது நலமாக உள்ளது. இந்த அதிசய சம்பவம் ஊர் முழுவதும் பரவியது. ஏராளமான மக்கள் அதிசய கோழிக்குஞ்சுகளை பார்த்து செல்கின்றனர்.

    இதுகுறித்து கால்நடைத்துறை டாக்டர் ஒருவர் கூறுகையில்:-

    மரபணு குறைபாடு காரணமாக ஒரே முட்டையில் 2 கோழி குஞ்சுகள் பொறித்துள்ளது என்றார்.

    Next Story
    ×