search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    தொங்கு சட்டசபை அமைந்தால் அரசியல் ஆட்டத்தில் நாங்கள் வெற்றி பெறுவோம்: மந்திரி ஆர்.அசோக்
    X

    தொங்கு சட்டசபை அமைந்தால் அரசியல் ஆட்டத்தில் நாங்கள் வெற்றி பெறுவோம்: மந்திரி ஆர்.அசோக்

    • நாங்கள் இங்கு விளையாட வந்துள்ளோம்.
    • கடந்த முறை கூட்டணி ஆட்சி வந்தது.

    பெங்களூரு :

    வருவாய்த்துறை மந்திரியும், பத்மநாபநகர், கனகபுரா தொகுதிகளின் பா.ஜனதா வேட்பாளருமான ஆர்.அசோக் பெங்களூருவில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளில் காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. சில கருத்து கணிப்புகள், பா.ஜனதா அறுதி பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெறும் என்று கூறியுள்ளன. இந்த முறை பா.ஜனதா ஆட்சி அமைவது உறுதி.

    ஒருவேளை தொங்கு சட்டசபை அதாவது இடங்கள் பற்றாக்குறை ஏற்பட்டால், அந்த அரசியல் ஆட்டம் ஆடி வெற்றி பெறுவோம். நாங்கள் இங்கு விளையாட வந்துள்ளோம். கடந்த முறை கூட்டணி ஆட்சி வந்தது. பின்னர் அந்த ஆட்சி கவிழ்ந்தது.

    கடந்த 4 ஆண்டுகளாக நிலையான ஆட்சி நிர்வாகத்தை வெற்றிகரமாக நடத்தினோம். தேர்தல் முடிவு வந்த பிறகு கட்சி மேலிட தலைவர்கள் உத்தரவுப்படி நாங்கள் நடந்து கொள்வோம்.

    ஒருவேளை பெரும்பான்மை கிடைக்காமல், பெரிய கட்சியாக உருவெடுத்தால், நாங்களே ஆட்சி அமைப்போம். பா.ஜனதா வெற்றி பெற்றால் முதல்-மந்திரி யார் என்பதை எங்கள் கட்சி மேலிடம் முடிவு எடுக்கும்.

    இவ்வாறு ஆர்.அசோக் கூறினார்.

    Next Story
    ×